ஆகஸ்ட் 30, 2011

யார் குற்றவாளி (காணொளி)

வணக்கம்....

செங்கொடி மரணத்தை தாழ்வுபடுத்தாதீர்கள்.
அவர் போல் யாரும் தழலில் சிக்காதீர்கள்.



இந்த காணொளியில்  நம் நாட்டு புலனாய்வு திறனை காணலாம்.
தமிழர்களின் “ஒன்றினையாமை”யால் என்ன நிகழ்ந்துள்ளது என்பதையும் உணருங்கள். நன்றி



நன்றி... குமுதம்.காம்


ஆகஸ்ட் 19, 2011

நெருப்பில் நிலவு

                                     


                                         (வெண்பா)

நெஞ்சுரம் நேர்மையோடு நேர்க்கோட்டில் நின்றெழுதி
வஞ்சமதை வேரறுக்கும் வர்க்கமது- அஞ்சா
கருத்தியல்பைக் கொண்டக் கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு.


ஆகஸ்ட் 01, 2011

நன்கொடை





அமிழ்தத்தில் சரியளவு
நச்சுக் கலந்து
அருந்தியவன் நிலையில்
அருந்தமிழ் இன்று.


வெகுசன ஊடகமாம்
தமிழ்த்திரை உலகில்
பல்லி விழுந்த
பாலைப் போல
பாடல்கள் பல.

வீரியத் தமிழில்
கலப்படம் செய்து
வியாபாரம் செய்யும்
கவி மேதாவிகளே!

உங்களின்
கலப்படத்தால்

காயப்படப் போவது
மொழி மட்டுமல்ல - நம்

இனமும்தான்.
ஏனெனில் “மொழி”
இனத்தின் அடையாளம்.

மொழியில் கலப்படம்
மொழிவளர்ச்சிக்கு வேகத்தடை!

கலப்படம் தவிர்த்தலே
மொழிக்குச் செய்யும் நன்கொடை!!
Related Posts with Thumbnails