மார்ச் 29, 2015

திரு,லீ குவான் இயூ

சொல்லி அடங்காத எந்த சொல்லிலும் அடங்காத சிங்கப்பூரின் சிற்பி மறைவுக்கான என் அஞ்சலி.

 லீ புகழ் வாழ்க

நாற்புறம் மாக்கடல் சூழ்ந்திட இந்நிலம்
நற்பயிர் என்றுமே விளையாதே!
நல்லவர் உன்மன வல்லமை யாலிதை
நன்நில மாக்கிய தலைவாநீ!
நேற்றிது காடென மீனவர் கூடென
நிற்கதி யற்றவோர் சிறுமேடு!
நேர்வழி காட்டியலீயவர் பாதையில்
நிற்குதே இன்றிது புகழோடு!

நான்கின மக்களும் சிங்கையர் என்றுதான்
நல்லினம் பேணிய மதியோனே!
நாடிது மேன்பட நல்வழி காட்டிய
நன்னெறி யூட்டிய நெறியாளா!
தேன்மொழி யாம்தமிழ் ஓர்மொழி சிங்கையில்
செய்தவர் வாழ்கிறார் மனகூட்டில்!
தென்கிழக் காசிய  மண்ணிலே சீர்மிகு
சிங்கையை தந்தஉன் புகழ்வாழ்க!!.

                        - சி.கருணாகரசு.


Related Posts with Thumbnails